Skip to content

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 58 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், இதற்கு பொறுப்பேற்று காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, அரியலூர் அண்ணாசாலை முன் அதிமுக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அரசு கொறடாவும் அரியலூர் அதிமுக மாவட்ட செயலாளருமான  தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் ராமஜெயலிங்கம், இளவழகன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, கழக பொறுப்பாளர்கள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!