Skip to content

டிமான்டி காலனி 2 படம் பார்க்க பேய் வேடத்தில் வந்த ஐடி ஊழியர்கள்…கோவையில் ருசிகரம்

சுதந்திரதினமான  இன்று விக்ரம் நடிப்பில் தங்கலான், , அருள்நிதி நடிப்பில் “டிமான்டி காலனி-2” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் “ரகு தாத்தா” உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் வெளியாகிறது.  “டிமான்டி காலனி 2” தயாரிப்பாளரின் ஐடி நிறுவன ஊழியர்கள் 450 பேருக்கு கோவை பிராட்வே திரையரங்கில் பிரத்தியகமாக அதன் முன்னோட்ட காட்சிகள் திரையிட்டனர். “டிமான்டி காலனி-2” திரைப்படம் வெளியாவதையொட்டி முன்னோட்டக் காட்சிகயை  பார்க்க வந்த ஐ.டி ஊழியர்கள் பேய் வேடம் அணிந்தும், அத்திரைப்படத்தின் பாடலுக்கு நடனமாடியும் கொண்டாடினர். இதையடுத்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திருடன் சேர்ந்து 450 ஐ.டி ஊழியர்கள் திரைப்படத்தை பார்த்தனர்.

இது குறித்து பேய் வேஷம் போட்ட ஊழியர் கூறியதாவது:

ஒரு சிலருக்கு பேய் படம் மிகவும் பிடித்து வருவதாகவும், குழந்தைகளுக்கும் பேய் என்றால் பயமாக உள்ளதாகவும், இந்த படம் பொதுமக்களை வெகுவாக கவரும் எனவும் தெரிவித்தனர்.  நாங்கள் அனைவரும் இந்த படத்தை காண பேய் வேஷம் போட்டு வந்து உள்ளோம். குறிப்பாக இந்த படம் ஆங்கில படத்திற்கு இணையாக ஆடியோ விஷுவல் மற்றும் வீடியோ அனைத்தும் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!