Skip to content
Home » புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு  கூட்டுறவு மெகா பட்டாசுகடையினை  கலெக்டர் மு.அருணாதலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.  மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில்  முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு. வீரமணி, துணை மேயர் எம்.லியாகத்தலி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலெட்சுமி தமிழ்செல்வன் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா , வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மதியழகன்,மாமன்ற உறுப்பினர் சுப.சரவணன் , உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!