Skip to content

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு…. முதல்வர் உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். தற்போது 46 விழுக்காடாக உள்ள அகவிலைப்படி இனி 50 சதவீதமாக கிடைக்கும்.  ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என  முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.  தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,  பென்சனர்கள் இந்த அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். இதன் மூலம் 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என  அரசு தெரிவித்து உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 2,588 கோடி கூடுதல் செலவாகும்.   அகவிலைப்படி உயர்வு வழங்கிய  முதல்வருக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!