தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது டெல்டா மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்தது.
திருச்சியில் இருந்து அதிகாலை 5 .35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6. 25 க்கு வந்தடையும் ரயில் கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12 .10 மணிக்கு சென்றடையும்,
மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 க்கு தஞ்சை வந்தடையும்
புதிய ரயில் இன்று திருச்சியில் 5.35 க்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.25 க்கு வந்த ரயிலை தஞ்சை எம்.பி முசொலி உள்ளிட்ட ரயில் பயணிகள் இனிப்பு வழங்கி உற்சாகமாக வரவேற்றனர் இந்த ரயில்சேவை திங்கள், வியாழன் தவிர வாரத்தின் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.