Skip to content
Home » திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

  • by Senthil

திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்சத் பேகம். இவரது மருமகள் ஆயிஷா பேகம். இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியார் மருமகள் சண்டையில் ஆத்திரத்தின் உச்சத்தில், மாமியார் சம்சத் பேகத்தை, மருமகள் ஆயிஷா பேகம் கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்த தகவலின் பெயரில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மருமகள் ஆயிஷா பேகத்தை பிடித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!