தென்காசி அருகே உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற நடிகர் தனுஷ்-ன் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி மாவட்ட கலெக்டர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடந்த 3 மாதமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்துள்ளது. படப்பிடிப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வனத்துறையிடம் அனுமதி பெறவில்லை என தகவல் வௌியாகியுள்ளது.
