தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டாரத்தில் உமையாள்புரம், அண்டக்குடி, திருமண்டங்குடி, கோபுராஜபுரம் ஆகிய கிராமங்களில் பருவம் தவறிப் பெய்த கன மழையினால் ஏற்பட்டுள்ள நெற்பயிர் சேதங்களை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் பாபநாசம் சுஜாதா வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் விவசாயிகளிடையே பேசும் போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் வயல்களில் மழை நீர் வடிய வாய்ப்பில்லாமல் தேங்கியுள்ளது. மேலும் அதிக விளைச்சல் காரணமாக நெற் பயிற் சாய்ந்து விட்டதால்,
அறுவடை பணி மிகவும் சிரமத்துடன் மேற்க்கொள்ளப்படுகிறது. மேலும் வடிகால் வசதி இல்லாத இடங்களில் இவ்வாறு சாய்ந்த நெற்பயிர்கள் தற்போது முளைக்கத் துவங்கி விட்டன. எனவே மேலும் தாமதிக்காமல் அறுவடை பணிகளை முடித்திட வேண்டும். விவசாயிகளின் சிரமத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். அதில் பயனடைய உண்மையிலேயே பாதிப்படைந்த விவசாயிகள் மட்டும் பதிவு செய்து செய்து கொள்ளலாம் என்றார். ஆய்வின்போது உமையாள் புரம் கிராம நிர்வாக அலுவலர் சுகுணா, கூனஞ்சேரி வேளாண்மை உதவி அலுவலர் நிவாசன், பாபநாசம் வேளாண்மை உதவி அலுவலர் திரிபுரசுந்தரி, அட்மா திட்ட மேலாளர் சிவரஞ்சனி ஆகியோர் உடன் இருந்தனர்.