Skip to content
Home » காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது மாண்டஸ்

வங்க கடலில்   உருவான மாண்டஸ் புயலானது  நேற்று நள்ளிரவு  மாமல்லபுரத்தில் கரையை கடக்க தொடங்கியது. அதிகாலை 2.30 மணியளவில்  முற்றிலுமாக கரை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. கரை  கடந்த ‘மாண்டஸ் புயல்’ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. இன்று மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை ெபய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் கடுங்குளிருடன் பலத்த காற்றும் வீசுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!