Skip to content
Home » காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…. இலங்கையில் கனமழை

  • by Senthil

தென்கிழக்கு வங்க கடலில்  இலங்கை, திரிகோணமலைக்கு 115 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மையம் கொண்டிருந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று  அதிகாலை 3.30 மணிக்கு  திரிகோணமலைக்கும் மட்டகளப்புக்கும் இடையே கரையை கடக்கத் தொடங்கியது. 4.30 மணி வரை, அதாவது ஒருமணி நேரம் கரையை கடந்தது.அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து அங்கு கனமழை நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.  அதன்படி இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டு இருக்கிறது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக தமிழகத்தில்  பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதே  நேரத்தில் நாகை துறைமுகத்தில் கடந்த 3 தினங்களாக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!