Skip to content
Home » உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

உலக கோப்பை வென்ற வீரர்கள் டில்லி வந்தனர்….. பிரதமரிடம் நேரில் வாழ்த்து

மேற்கு இந்திய தீவில் நடந்த டி20 உலக கோப்பையின் பரபரப்பான பைனலில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2007ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனாகி முத்திரை பதித்தது. இந்திய வீரர்கள் உலக கோப்பையுடன் நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், பார்படாஸில் சூறாவளி, புயல், கனமழை என சுழற்றி அடித்ததால் விமான நிலையம் மூடப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக கடந்த 3 நாட்களாக  மேற்கு இந்திய தீவில் தங்கியிருந்த இந்திய  வீரர்கள் நேற்று ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில்  இந்தியா புறப்பட்டனர்.  இன்று காலை இந்திய அணி வீரர்கள் டில்லி வந்தடைந்தனர்.  விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு  ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று காலை 11 மணிக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்  பிரதமர் மோடியை சந்திக்கிறார்கள். அப்போது பிரதமரிடம் கோப்பையை காட்டி  வாழ்த்து பெறுகிறார்கள்.

பிரதமரை சந்திக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாலை மும்பை செல்கிறார்கள். உலகக்கோப்பையுடன் இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி பேரணியாக செல்கிறது. உலகக்கோப்பையுடன் மெரைன் டிரைவில் இருந்து மும்பை வான்கடே மைதானத்துக்கு திறந்த வாகனத்தில் பேரணியாக செல்கின்றனர். வான்கடே ஸ்டேடியத்தில் மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!