Skip to content

கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கு ஆண் குழந்தை

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.  ஆசிய கோப்பை போட்டியில் நேபாளத்திற்கு எதிரான இரண்டாவது போட்டியில் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி மும்பை திரும்பியுள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவருடைய மனைவி சஞ்சனா கணேசன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில்,  “எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நிறைவாக உள்ளன. இன்று காலை நாங்கள் எங்கள் குழந்தை அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவிற்கு மேல் இருப்பது போன்று உணர்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயம் கொண்டு வரும் எல்லாவற்றிற்கும் காத்திருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.  பும்ராவின் மனைவி சஞ்சனா தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!