Skip to content
Home » மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி…பெரம்பலூரில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு..

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு ஒவ்வொரு மாவட்டமாக வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை கொண்டு பெரம்பலூர் செஞ்சேரி மிராக்கல் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் திரளானோர் பங்கேற்று ஒவ்வொருவரும் தனித் திறமையை வெளிப்படுத்தினர். இதில் 5 பெண் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பெண் கிரிக்கெட் வீரர்கள் தேர்வாகியுள்ள செய்தியை அறிந்த விளையாட்டு ஆர்வலர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!