Skip to content
Home » உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

உலக கோப்பை வென்ற கிரிக்கெட் வீரர்களுக்கு…. பிரதமர் மோடி விருந்து

மேற்கு இந்திய தீவில் கடந்த 29ம் தேதி நடந்த உலக கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி ,  தென் ஆப்பிரிக்காவை  7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி 17 வருடங்களுக்கு பின்னர் 020 உலக கோப்பையை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற  இந்திய அணி வீரர்கள்  தனி விமானம் மூலமாக  இன்று காலை  டில்லி அழைத்து வரப்பட்டனர்.   இறுதிப்போட்டி நடந்த பார்படாசில் 3 நாட்கள் கடும் புயல், மழை, காரணமாக  விமான நிலையங்கள் மூடப்பட்டதால் வீரர்கள்  வர தாமதம் ஏற்பட்டது.

நேற்று மாலை பார்படாஸ் விமான நிலையத்தில்  இருந்து இந்திய அணி வீரர்கள் புறப்பட்டனர். இன்று காலை டில்லி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்திய அணி வீரர்களை வருவதை அறிந்த ரசிகர்கள், காலை 5.30 மணி முதலே  விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். இந்திய அணி வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளி வந்த போது, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.

இதன்பின் ஹோட்டலுக்கு சென்று தயாரான இந்திய அணி வீரர்கள், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டனர். அப்போது இந்திய அணிக்காக உருவாக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் ஜெர்சியை இந்திய அணி வீரர்கள் அணிந்திருந்தனர். 2 ஸ்டார்களுடன் கூடிய சாம்பியன்ஸ் ஜெர்சியை அணிந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தனர்.

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நட்சத்திர வீரர் விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களும் பிரதமரை 11 மணிக்கு சந்தித்தனர். அப்போது இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்டோர் இந்திய வீரர்களுடன் உடனிருந்தனர்.

தொட்ர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்தார்.  இந்த விருந்து உபசரிப்பு மதி்யம் 12.40 மணி வரை நடந்தது. அதன் பிறகு வீரர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

1983ம் ஆண்டு உலகக்கோப்பையை முதல்முறையாக வென்ற போதும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்திய வீரர்களுக்கு வரவேற்பு கொடுத்து விருந்தளித்தார். அதேபோல் 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளிலும் இந்திய வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த முறை ஆசியப் போட்டிகளிலும் வென்ற போதும், இந்திய வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மும்பை வான்கடே மைதானத்தில் வரவேற்பு  மற்றும் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில்ரசிகர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி பரிசு வழங்கப்படுகிறது . முன்னதாக ஓட்டலில் இருந்து இந்திய வீரர்கள் வான்கடே மைதானத்திற்கு திறந்த வாகனத்தில் பேரணியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!