Skip to content
Home » 2வது ஒருநாள் போட்டி….. இலங்கை நிதான ஆட்டம்

2வது ஒருநாள் போட்டி….. இலங்கை நிதான ஆட்டம்

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

இந்த போட்டிக்கான  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.    இலங்கை வீரர்கள்  நவிந்து பெர்னாண்டோ,  அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  6ஓவர் கடைசி பந்தில்  சிராஜ் பந்தில் போல்டாகி  அவிஷ்கா அவுட் ஆனார். அப்போது அவர் 20 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு பதில்  குசல் மெண்டிஸ் களம் இறங்கினார். 7 ஓவர் முடிவில் இலங்கை  38 ரன்களை சேர்த்தனர்.

புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இலங்கை அணி இங்கு 8 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கு ஒரு நாள் போட்டி நடந்தது. அதில் 252 ரன்கள் எடுத்த இந்தியா ஆஸ்திரேலியாவை 202 ரன்னில் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!