Skip to content
Home » பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் ….. கம்யூ. நடைபயணம்…. எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மருது தலைமையில் பாஜக அரசை அகற்றி இந்தியாவை பாதுகாப்போம் என்று நாடு தழுவிய நடை பயணம் துவக்க விழா நடைபெற்றது. துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் பேரணியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் /பேரணியில் பாஜக அரசை அகற்றுவோம்/ இந்தியாவை பாதுகாப்போம் என்று வாசகங்கள் எழுதிய பதாகைகள் உடன் பேரணி துவங்கியது. ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கும்பலின் முகமூடியாக இருந்து ஜனநாயக விரோத ஆட்சி நடத்தும் பாஜக அரசை அகற்றிடுவோம். பெட்ரோல். டீசல். கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தாமல் அரிசி. பருப்பு. எண்ணெய் முதல் காய்கறி பால் என்று அனைத்து உணவு பொருட்கள் விலை  உயர்வால் மக்களை நசுக்கும் பாஜக அரசை அகற்றிடுவோம்.
கருப்பு பணத்தை மீட்பதாக பண மதிப்பு இழப்பை அமுல்படுத்தி ஏழை எளிய  மக்களை வங்கி ஏடிஎம்மில்

நிற்க வைத்தும் கருப்பு பணத்தை மீட்காத   பாஜக அரசை அகற்றுவோம். மத்திய உணவு பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் நாட்டு மக்களை ஏமாற்றி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும்,  அதிகார வர்க்கத்திற்கும் விசுவாசம் காட்டும் பாஜக அரசை  அகற்றுவோம் என்ற கோஷங்களுடன் பேரணி  உப்பிலியபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வெங்கடாசலபுரம் வரை சென்றது.

இந்த  நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் திருவெறும்பூர் தாலுகா செயலாளர் பழனிச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி, ஒன்றிய துணை செயலாளர் சந்திரசேகர் ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு தங்கராஜ், கிளைச் செயலாளர் சின்னசாமி உள்பட சிபிஐயினர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!