திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இன்று திமுக தேர்தல் பணிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் முடிவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. முதல்வர் ஸ்டாலின், மற்றும் முத்தரசன், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்த கட்டமாக முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
