Skip to content

திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூர்  நடராஜன் காலனியை சேர்ந்தவர்  சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு குழந்தைகள் இலலை.  இவர்கள் வீட்டிலேயே முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை  செய்து வந்தனர்.  சுரேஷ் வீடு கட்டுவதற்காக பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார்.

சங்கீதா தீபாவளிக்கான பலகார  சீட்டும் சேர்த்து இருந்தார். தீபாவளி நெருங்கி விட்டதால்  பலகாரம், பணம் செட்டில் செய்ய வேண்டி இருந்தது.  இதற்காக ரூ.3 லட்சம் தேவைப்பட்டது. பல இடங்களில் கடன் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேசும், சங்கீதாவும் தற்கொலை செய்யும் நோக்கத்தில் இருவரும் தங்களை தாங்களே கழுத்தை அறுத்துக்கொண்டார்களாம்.

ரத்தம் சொட்டிய நிலையில் உயிருக்கு பயந்துபோன   சுரேஷ், 108க்கு போன் செய்து உள்ளனர்.  உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து அவர்களை  மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இது தொடர்பாக   துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!