தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் மகேஸ்வரி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் நகராட்சி ஆணையராக பணியாற்றியுள்ளார். அப்போது, ஒப்பந்தப் பணி வழங்குவது தொடர்பாக இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சுடர்மணிக்கும் (56) முரண்பாடு ஏற்பட்டது.
இந்த முன் விரோதம் காரணமாக தன்னைப் பற்றி சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைக் கூறி அவதூறு பரப்பி வருவதாக சுடர் மணி மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த பாலு மீதும் தஞ்சாவூர் மேற்கு போலீசில் ஆணையர் மகேஸ்வரி கடந்த 31ம் தேதி புகார் செய்தார்.
இதன் பேரில் சுடர்மணி, பாலு மீது தஞ்சாவூர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சுடர்மணியை போலீசார் கைது செய்தனர்.