Skip to content

ஈரோடு….ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிமுகம்….

  • by Authour

ஈரோடு கிழக்குத்தொகுதி  இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடந்தது.  மொத்தம் உள்ள 2லட்சத்து 27ஆயிரதத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70ஆயிரதத்து 192 பேர் வாக்களித்தனர். இது 74.79% ஆகும். ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு  சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கி நடந்து வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்19,223 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு6,497வாக்குகள் பெற்றிருந்தார்.   காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், அதிமுக வேட்பாளரை விட  13 ஆயிரம் வாக்குகள், அதாவது 3 மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று  வெற்றி பயணத்தை தொடங்கி உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 514  வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 90 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!