Skip to content
Home » பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

  • by Senthil

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த .ஜெ.ஜெகன் குமார்  பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின் போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 24.10.2024 இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக  பயணியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் .ஜெ.ஜெகன் குமார்  குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும்  முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்ததுடன், உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமார்  குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் முதல்வர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!