Skip to content
Home » சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

சமுதாய வளைகாப்பு…. சீர்வரிசை வழங்கிய எம்எல்ஏ….

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அம்மாபேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் குத்து விளக்கேற்றினார். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா 150 கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை தட்டை வழங்கினார். இதில் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் தங்கமணி சுரேஷ், பி.டி ஓக்கள் கூத்தரசன், அமானுல்லா,

மாவட்டக் கவுன்சிலர் ராதிகா, மெலட்டூர் பேரூராட்சி மன்றத் தலைவி இலக்கியா உட்பட பங்கேற்றனர். பட விளக்கம்: அம்மாபேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!