Skip to content
Home » காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

காமெடியாக சொன்ன விஷயம் சர்ச்சையாகிவிட்டது… பல்டியடித்த சரத்குமார்…

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சரத்குமார். நடிகராக இருக்கும் அவர், அரசியல் கட்சி ஒன்றையும் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு சரத்குமார் பேசினர்.

sarathkumar

அதில் எனக்கு 69 வயதாகிறது. 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நான் இப்போதும் 25 வயது இளைஞனாகதான் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். என்னால் அப்படி இருக்க முடியுமென்றால் அதற்கான வித்தையை கற்று வைத்துள்ளேன். அந்த வித்தையை 2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் என்னை முதல்வராக ஆக்கினால் சொல்கிறேன் என்று கூறினார். சரத்குமாரின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

sarathkumar

இந்நிலையில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘போர் தொழில்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட நடிகர் சரத்குமாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்சியினரை உற்சாகப்படுத்த அப்படி காமெடியாக பேசினேன். நான் சொன்னது இவ்வளவு பெரிய செய்தியாகும் என நினைக்கவில்லை. யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா என யோசித்து பாருங்கள் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!