Skip to content

பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு,

அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்துவிடுவதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வரபெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களிலும் மேற்கண்ட போலியான நபர்கள் அடையாள அட்டைகளை பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டுவருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசு பணியில் உள்ள அலுவலர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை பெற்று அரசுத்துறைக்கு பரிந்தரை செய்வதாக கூறும் நபர்கள் குறித்து உடனடியாக தொடர்புடைய அரசுத்துறை அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல்துறை மூலமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!