Skip to content
Home » சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

சீர்காழி விபத்தில் 20 பேர் காயம்,,,, கலெக்டர் நலம் விசாரித்தார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு சொகுசு பஸ் சீகாழி  பைபாஸ் சாலையில் விபத்துக்குள்ளானதில் பஸ் கண்டக்டர் மற்றும் டூவீலரில் வந்த 3 பேர் ஆகிய 4 பேர் பலியானார்கள். விபத்தில் காயமடைந்த சுமார் 20 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் . மகாபாரதி நேரில் சென்று நலம் விசாரித்தார். உடன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ,சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் மரு. குருநாதன்,வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ் ,சீர்காழி வருவாய் வட்டாட்சியர் செந்தில் குமார்  மற்றும்  மருத்துவர்கள் செவிலியர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!