Skip to content
Home » தக்காளி, தேங்காய் விலை உயர்வு

தக்காளி, தேங்காய் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனையானது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, அதன் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்த மாதத்தில் பண்டிகை நாட்கள் வருவதால் இந்த மாதம் முழுவதும் தக்காளி  விலை இறங்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

இதுபோல தேங்காய் விலையும்  ஏறிக்கொண்டே இருக்கிறது. கடந்த மாதம்  12 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய்கள் இப்போது  18, 20 ரூபாய் என விற்கிறது.  இப்போது அதிகபட்சமாக சில்லறை கடைகளில் ஒரு தேங்காய் 32 ரூபாய் வரை விற்பனை யாகிறது. தேங்காய் விலையும் இன்னும் ஒரு மாதத்திற்கு  ஏறுமுகமாகத்தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!