Skip to content

மாணவ செல்வங்கள் வெற்றி பெற நான் உறுதுணையாக இருப்பேன்… முதல்வர் ட்வீட்

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் கடந்த ஏப்.29 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு  இன்று  பள்ளிகள் திறக்கப்பட்டன. காலையிலேயே மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்தனர்.  இந்த கல்வி ஆண்டின் முதல் நாளில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்ததை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு வாழ்த்தி உள்ளார். இதை தொடர்பாக முதல்வர்  அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்! நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன் என பதிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!