Skip to content

என் தஞ்சை நிலம் தொடும்போதெல்லாம்….. நெஞ்சம் நிறையும்….. முதல்வர் மகிழ்ச்சி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகள் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆய்வு செய்தார்.  அவர் சென்ற இடம் எல்லாம் மக்கள் முதல்வரை  உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகிலும் காத்திருந்த மக்கள் முதல்வரிடம் மனுக்கள் கொடுத்தனர்.

தூர்வாரும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், தஞ்சை விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான  முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டுள்ளதை நேரில் பார்வைியட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு தஞ்சை சுற்றுப்பயணம் மனநிறைவை கொடுத்துள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டரில்,

நெற்கழனிகள் நிறைந்த என் தஞ்சை நிலம் தொடும் போதெல்லாம் மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறையும்! என்று தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!