Skip to content

மயிலாடுதுறையில் விழா… ரயிலில் புறப்பட்டார் முதல்வர்..

மயிலாடுதுறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள  மாவட்ட கலெக்டர் அலுவலகம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை நாளை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணியளவில் சென்னை எக்மோரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டார். ரயில் ஸ்டேஷனில் முதல்வரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர். இரவு 8.15 மணிக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் திருவெண்காட்டில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார். நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!