Skip to content
Home » முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை டில்லி பயணம்….. நாளை மோடியுடன் சந்திப்பு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ்   தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.  தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் இந்த நிதியை விடுவிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மொத்த செலவான ரூ.63,246 கோடியில், மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடியாகும், மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியாகும். மீதமுள்ள நிதியான ரூ.33,593-ஐ வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடனாக பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்கா சென்று கடந்த  கடந்த 14-ம் தேதி சென்னை திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கல்வி மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.
இதையடுத்து, நாளை (செப்.27)  பிரதமர் மோடியை, முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அதற்காக , இன்று மாலை 5.10 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் டில்லி புறப்பட்டுச் செல்கிறார். இரவு, டில்லியில், தமிழக எம்.பி.க்கள் அவரை வரவேற்கின்றனர். தொடர்ந்து, நாளை காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
அதன் பிறகு அவர்  இந்தியா  ராகுல் காந்தியை சந்தித்து பேசவும் திட்டமிட்டிருப்பதாக கூறபபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!