பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை மரணமடைந்தார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி, உங்கள் அன்புக்குரிய தாயார் ஹீரா பென்னுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயின் இழப்பை யாராலும் தாங்க முடியாது. உங்கள் இழப்புக்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் இருந்த நினைவுகளில் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் மோடியின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணி விமானத்தில் அகமதாபாத் செல்கிறார். அங்கு மோடியின் தாயார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு மோடிக்கு நேரில் ஆறுதல் கூறுகிறார். இதுபோல பல்வேறு மாநில முதல்வர்களும் செல்கிறார்கள்.