Skip to content

மதுரையில், தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி மற்றும் 61வது குரு பூஜை விழா நேற்று முன்தினம் காலை ஆன்மிக விழாவுடன் துவங்கியது. இன்று காலை நடைபெறும் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிவு மதுரை சென்றார். இன்று காலை மதுரை கோரிபாளையம் பஸ் நிலையம் அருகே  உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன்  முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், அமைச்சர்கள்   பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி,   தங்கம் தென்னரசு , எம்.எல்.ஏ. தளபதி ஆகியோரும்  மரியாதை செலுத்தினர்.

பின்னர், மதுரை அண்ணாநகர் மேம்பால பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மதுரை தெப்பக்கள்ம் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், பசும்பொன்னுக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.45 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகின்றனர்.

அதைத்தொடர்ந்து  சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செய்ய உள்ளனர். முதல்வர் வருகைக்காக  தேவர் நினைவிடத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தென்மண்டல ஐ.ஜி நரேந்திரன் நாயர் தலைமையில் 4 டிஐஜிகள், 30 எஸ்.பிகள் முன்னிலையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!