Skip to content

முதல்வர் ஸ்டாலின் என்னை விசாரித்தது …. ரொம்ப சந்தோசம்…. சி.ஆர். சரஸ்வதி பேட்டி

  • by Authour

சென்னை அசோக் நகரில்  இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.  ஆய்வு பணி முடிந்ததும் காரில் ஏறி புறப்பட்டபோது அந்த பகுதியில்  அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி நின்றிருந்தார். அவர் முதல்வரை பார்த்ததும்  வணக்கம் தெரிவித்தார்.  இதை கவனித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்  காரில் இருந்து இறங்கி வந்து  சி. ஆர். சரஸ்வதியிடம் நலம் விசாரித்தார். பின்னர் காரில் ஏறி புறப்பட்டார் முதல்வர்.

முதல்வர் சந்தித்தது குறித்து சி. ஆர் சரஸ்வதி கூறியதாவது… என்னை பார்த்ததும் முதல்வர் இறங்கி வந்து என்னிடம் நலம் விசாரித்தது மிக்க மகிழ்ச்சி. என்ன இங்கே நிற்கிறீர்கள் என கேட்டார். இங்கே தான்  என் வீடு என்றேன்.  சில நேரங்களில் குடிநீர் வருவதில் பிரச்னை இருக்கிறது என்றேன். அதற்காகத்தான்  நான் வந்து ஆய்வு செய்தேன் என்றார். மாற்று கட்சியில் நான் இருந்தாலும் என்னிடம் வந்து முதல்வர் விசாரித்தது   ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவரை பாராட்டுகிறேன் என்று இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!