Skip to content
Home » வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

  • by Senthil

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.  நேற்று இரவு 11.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த மாண்டஸ் இப்போது வேகத்தை குறைத்து கொண்டு உள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் நாளை (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே85 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம் உருவானதையடுத்து  சென்னை, கடலூர்,  நாகை துறைமுகங்களில்  நேற்று முதல் புயல் எச்சரிக்கை கூண்டு தொங்கவிடப்பட்டுள்ளது.  டெல்டா மாவட்டங்களில் தொடாந்து மழை பெய்து வருகிறது. இதனால் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!