Skip to content
Home » திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

திருச்சி சாக்சீடு காப்பகத்தில் குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதி செய்து தர வேண்டும்…

அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மற்றும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக் கை மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில், பராமரிப்பில் குறைபாடு மூச்சுத்திணறலால் குழந்தைகள் இறந்தது. காரணம் மேற்படி காப்பகத்தில் பணியாளர் பற்றாக்குறையால் குழந்தைகள் பராமரிப்பில் கவனக்குறைவு ஏற்பட்டு வருகிறது.

வளர்ச்சி குறைவு குழந்தைகளை பராமரிக்கும் இன்குபேட்டர் வசதிகள் இல்லை. குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகளுக்கு தினசரி கண்காணிக்க குழந்தை மருத்துவர்கள் நியமிக்கப்படவேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தடையின்றி கிடைக்கும் வகையில் தாய்ப் பால் வங்கியை சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தில் துவங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும் போது உடனடியாக கொண்டு சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் திருவரங்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான மருத்துவ பிரிவினை உருவாக்கித் தரவேண்டும். மேற்குறித்த கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் உரிய கவனம் எடுத்து செய்து கொடுப்பதோடு சாக்சீடு குழந்தைகள் காப்பகத்தினை தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!