Skip to content

திருச்சியில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் குண்டாசில் கைது….

திருச்சி மாநகர கமிஷனர் ந.காமினி,   உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், பெண்களை மற்றும் சிறுமிகளை பாலியல்
தொழிலில் உட்படுத்தும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள்
மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கைகள் எடுத்து
வருகிறார்கள்.

அதன்படி திருச்சியில் கடந்த 10.10.23-ந்தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை கீழபுதூரில் வாடகைக்கு வீடு எடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக பெறப்பட்ட புகாரின் பேரில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார்( 37)  மற்றும் 4 பேர்  சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர். மேலும் விசாரணையில், ரவிக்குமார் என்பவர் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர் என விசாரணையில் தெரியவருவதால், ரவிக்குமாரின் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு கோட்டை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர கமிஷனர் காமினி, குற்றவாளியான ரவிக்குமார் குண்டாசில் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்துவரும் ரவிக்குமார் மீது மேலும் குண்டாசின் கீழ் சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இது போன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!