Skip to content

அரியலூருக்கு 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக முடிவு…

  • by Authour

அரியலூர் ரிதன்யா மஹாலில், மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திமுக கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை குறித்தும்,தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் மற்றும் கழக ஆக்க பணிகள் குறித்து, மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைகள் வழங்கினார். வருகின்ற 15ஆம் தேதி அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெருந்திரளாக கழகத் தோழர்கள் பங்கேற்று வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர் முனைவர் சபாபதிமோகன், குன்னம் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர் ஏ.கே.அருண், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி மேற்பார்வையாளர் கலா சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள்,அனைத்து அணி நிர்வாகிகள், கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!