Skip to content
Home » மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

  • by Senthil

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது. புயல் காரணமாக சென்னையில் தரைக்காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் தரைக்காற்று மற்றும் கடல் சீற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் , பட்டினப்பாக்கம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!