Skip to content
Home » சூட்கேசில் சடலம்…… பெண் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

சூட்கேசில் சடலம்…… பெண் கொலை ஏன்? திடுக்கிடும் தகவல்கள்

  • by Senthil

சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. . அந்த சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு அதிகளவில் ரத்தம் வழிவதை பார்த்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம்  போலீசுக்கு  தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை  கைப்பற்றி  அதை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு  உடல் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. , உடல் பாகங்களை வைத்து  போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாலியல் தொழிலில் ஈடுபடும் சென்னை மணலியைச் சேர்ந்த தீபா (32) என்பதும், இவர் திருமணம் ஆகாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், இடைத்தரகர் மூலமாக பாலியல் தொழிலில் ஈடுபட இங்கு வந்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அப்போது, அந்த சூட்கேசை அதே பகுதியில் தங்கியிருந்த ஒரு நபர் வந்து போட்டு விட்டுச் சென்றது தெரியவந்தது.இதனையடுத்து, போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில், நேற்று இரவு பாலியல் தொழிலில் ஈடுபடும் தீபாவை இடைத்தரகர் மூலம் வர வைத்ததாகவும், பின்னர் பணம் கொடுப்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தீபாவை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. எனவே, மணிகண்டனை கைது செய்த போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!