Skip to content

சென்னை டாக்டர்- வக்கீல் தம்பதி , 2 மகன்களுடன் தற்கொலை

  • by Authour

சென்னை திருமங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் பாலமுருகன்(52), இவரது மனைவி சுமதி(47).  சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக  பணியாற்றி வந்தார். இவர்களுக்கு  ஜஸ்வந்த் குமார்(19),   லிங்கேஷ்குமார்(17) ஆகிய 2 மகன்கள் உண்டு. டாக்டர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவுக்கு  கடன் இருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள்  நெருக்கினர். கடனை திருப்பி செலுத்தமுடியாமல் டாக்டர் பாலமுருகனும், அவரது மனைவியும்  சிரமத்திற்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் டாக்டர் பாலமுருகன்,  மனைவி சுமதி, மற்றும் 2 மகன்கள் என 4 பேரும்  வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்கள்.  கடன் தொல்லையால்   இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து  சென்னை திருமங்கலம் போலீசார் விசாரிக்கிறார்கள்.  4 பேரின் உடல்களும்  உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டர், வழக்கறிஞர் குடும்பம்  ரூ.5 கோடி கடனுக்காக  தற்கொலை செய்தார்களா, ? கடன் கொடுத்தவர்கள் பெரும் கந்துவட்டி  கும்பலா,  அவர்களிடம் இருந்து  மிரட்டல் எதுவும் வந்துள்ளதா,?  டாக்டர்,  மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் கடைசியாக யாருடன் போனில் தொடர்பு கொண்டனர்.  கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

error: Content is protected !!