Skip to content

நகராட்சி நிர்வாகத்துறையில் பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சியில் 227 நபர்களுக்கும். நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் 84 நபர்களுக்கும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் 10 நபர்களுக்கும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 130 நபர்களுக்கும், என மொத்தம் 451 பணியாளர்களின் வாரிகதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணிநியமன அணைகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது,   நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, தலைமைச் செயலாளர் . சிவ் தாஸ் மீனா,

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன்,  சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் ஆர்.கிர்லோஷ் குமார்,   தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர்  வி. தட்சினாமூர்த்தி,  பேரூராட்சிகளின் இயக்குநர்   கிரண் குராலா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!