Skip to content

சென்னையில் மீண்டும் கனமழை….

  • by Authour

மிக்ஜாம் புயலால் சென்னையில் வௌ்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பாடு, மின்சாரம் இன்றி பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்திலிருந்து அனைத்து மாவட்டத்திலிருந்தும் சென்னை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.  முதல்வர் ஸ்டாலின் சென்னை பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். நடிகர்களும் சாப்பாடு, நிதியுதவியும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மேற்கு அண்ணா நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதிகளில் கனமழை பெய்யத் தொடங்கியது. சென்னையில் 2 நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. செய்வதறியாது இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல்  பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!