போரூரில் இருந்து ராமாபுரம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து முடங்கியது. எம்ஜிஆர் பாலம் மீதும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்-கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளுத்தும் வெயிலில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். பூந்தமல்லியில் இருந்து ராமாபுரம் சென்ற தனியார் பேருந்து பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் சாலையில் நடுவே இருந்த பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்யும் பணியில் மும்மூரம் காட்டி வருகின்றனர்.