Skip to content
Home » சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

சிபிஐயில் சிக்கிய லஞ்ச அதிகாரி.. 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..

  • by Senthil

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் இணை-இயக்குனராக பணியாற்றி வருபவர் ஜவ்ரி மல் பிஷோனி (44). இவர் தொழிலதிபரிடமிருந்து வெளிநாட்டிற்கு உணவு பெட்டிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் சான்றிதழ் வழங்க 9 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதன்படி, முதற்கட்டமாக நேற்று தொழிலதிபரிடமிருந்து பிஷோனி 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். அப்போது, அவரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். பின்னர், இரவு முழுவதும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் உள்ள பிஷோனியின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இரவு முழுவதும் சோதனை நீடித்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. தொடர்ந்து லஞ்ச புகாரில் பிஷோனியை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் முற்பட்டனர். அப்போது, வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் 4-வது மாடியில் இருந்து பிஷோனி கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த பிஷோனி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!