ராஜேந்திர பலாஜி 2016 முதல் 2021 வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆளுநர் ரவி இன்னும் ஒப்புதல் தரவில்லை என சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்குக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அளித்த அதிரடி தீர்ப்பையொட்டி கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.