திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி நகரை சேர்ந்தவர் பாபு மகன் கோவிந்தராஜ் (29). இவரும், அதே பகுதி புதுத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ஐயப் பன் (33), ஜேஜே நகரை சேர்ந்த குமாரவேல் மகன் ராஜா(39), அம்மாமண்ட பம் புதுநகரை சேர்ந்த நீலமேகம் மகன் கோபலகிருஷ்ணன் (30) ஆகிய 4 பேரும் ஆம்னி காரில் புளியஞ்சோலை சென்று விட்டு மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பி கொண்டிருந்தனர்.
காரை கோவிந்தராஜ் ஓட்டினார். எதிர்திசையில் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்த குமார் மகன் அஜய்பிரசாத் (28) திருச்சியிலிருந்து துறையூர் நோக்கி மற்றொரு காரை ஓட்டி வந்தார். இந்த இரு கார்களும் புலிவலம் தனியார் கல்லூரி அருகே வனப்பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த அனைவரையும் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட கோபாலகி ருஷ்ணன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புலி வலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்