கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கடலூர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு பெண்களை ஏற்றுக்கொண்டு சென்றுகொண்டிருந்தார். ராமாபுரம் அருகே விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நேரு சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்று நேருவின் இருசக்கர வாகனம் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் அதிமுக பிரமுமர் நேரு மற்றும் அவருடன் இருசக்கர வாகனத்தில் வயல் வேலைக்காக சென்ற இரண்டு பெண்களும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.