Skip to content

பெல் டவுன்ஷிப் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பெல் டவுன்ஷிப்பில் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் 14ம்ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கடந்த 4ம் தேதி கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு  வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இதனைதொடர்ந்து நாள்தோறும் பல்வேறு விஷேச பூஜைகள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக இன்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீபத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். கோவிந்தா கோவிந்தா என பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழுங்க திருத்தேரோட்டமானது நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!