Skip to content

எழுச்சியுடன் மக்கள் வாக்களிக்கிறார்கள்….பாமக வேட்பாளர் அன்புமணி பேட்டி

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதேபோல, நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, தனது சொந்த கிராமமான பனையபுரத்தில், வீடு வீடாகச் சென்று  வாக்கு சேகரித்தார்.

20 பூத்களுக்கு சென்று  வாக்குப்பதிவு நிலவரத்தை பார்வையிட்டேன். வாக்குப்பதிவு எழுச்சியுடன் உள்ளது. எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு சாதகமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!