Skip to content
Home » அரசு பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு… தறிகெட்டு ஓடிய பஸ் பைக்குகள் மீது மோதி ஒருவர் பலி

அரசு பஸ் டிரைவருக்கு திடீர் வலிப்பு… தறிகெட்டு ஓடிய பஸ் பைக்குகள் மீது மோதி ஒருவர் பலி

  • by Senthil

பெங்களூருவில் இருந்த திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் ஒன்று  வந்தது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் பழனி என்பவர் பஸ் ஓட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே இன்று காலை இந்த பஸ் வந்தது. அப்போது பஸ் டிரைவர் பழனிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் அவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் நின்ற 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். மேலும் காலை நேரம் என்பதால் சாலையில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர், விபத்து குறித்து அறித்து சம்பவ இடத்திற்கு வந்த மத்தூர் போலீசார் வலிப்பு வந்து மயங்கி கிடந்த டிரைவர் பழனி மற்றும் பஸ் மோதியதால் படுகாயம் அடைந்த முதியவர் ஆகிய 2 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அதில் படுகாயம் அடைந்த முதியவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் டிரைவர் பழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!